Friday, December 31, 2010

புது வருட Resolution.....

புது வருட Resolution.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..






(தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...............)

Saturday, December 4, 2010

ஸ்மைல் பிளீஸ்.........

டேய்........ பேட்டரி மூணு மணி நேரமா சார்ஜ் ஆயிடுச்சி.... முத போட்டாவா யென்ன யெடு..........


முண்டா பனியனுடன் முறைப்பாய் போஸ் கொடுத்துக்கொண்டிருந்த நண்பனை புதிதாய் வாங்கிய நிக்கான் கேமராவில் விழுங்கினேன்.


’கிளிக்’............. இந்த சத்தம் காதில் ரீங்காரமிடும்பொதெல்லம் மனசு அவரை நினைத்துகொள்ளும்.....


அவர்................. மாயவரம் நியூ போட்டோ ஸ்டூடியோவின் ஆஸ்தான போட்டோகிராபர் மற்றும் ஸ்டூடியோவின் 'ஆல்-இன்-ஆல்'.


சின்ன வயசில் முதல் முறையாய் போட்டோ எடுக்க என்னயும், அக்காவயும் அம்மா அங்கு கூட்டி செல்கையில் புது பேண்ட் சட்டை வாங்கி கொடுத்தால்தான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன்னு அடம்பிடித்த என்னை பளீர்ன்னு முதுகில் அம்மா ரெண்டு போட "புள்ளய அடிக்காதம்மா, இங்க வாடாப்பா"ன்னு என்னை அருகில் இழுத்து மடியில் அமர்த்தி தனக்காக வாங்கி வைத்திருந்த டீயில் பன்னை நனைத்து வாயில் ஊட்ட அழுகயை நிறுத்தினேன் நான்.


ஒழுகிய மூக்கை நாலு முழ வேட்டியின் உள்முனையில் துடைத்தவர் "பாரு, அழுததுல பௌடரெல்லாம் அழிஞ்ச்சிபோச்சி"ன்னு சொல்லிக்கிட்டே பௌடரை மூஞ்சில் அப்பிவிட்டு அக்காவின் பக்கத்தில் இருந்த உருலையில் என்னை தூக்கி நிப்பாட்டி ”சிரிடா ராஜா, ஆங்..... இங்க பாரு.......... ஆங்.............."


’கிளிக்’...........................


(நான் கேட்ட முதல் ‘கிளிக்’ சத்தம்.... இன்னக்கி தான் கேட்டது போல இருக்கு... இடையில் தான் எத்தனை வருடங்கள். பீரோவில் இன்றும் பத்திரமாய் இருக்குறது அந்த போட்டோ..........)


அக்டோபரில் லீவில் ஊருக்கு போனபோது நியூ போட்டோ ஸ்டூடியோவை கடந்து போக எத்தனிக்கயில் ஏதோ ஞாபகம் வந்தவனாய் சட்டென்று உள்ளே செல்ல, முன்னறை கல்லாப்பெட்டியில் இருந்த ரெட்டைநாடி சாரீரம் "உள்ள போங்க சார்"ன்னு கைகாட்ட, கருநீல துணியை விலக்கியபடியே இருளறைக்குள் பிரவேசித்தேன் நான்.


"கணுக்கால் பக்கம் கொசுவத்த சரிபண்ணிவிட்டுக்கம்மா, ம்ம்.......... இப்ப சரியா இருக்கு, அப்படியே நிமுந்து பாரு..... ம்..... தலய லேசா இந்த பக்கம்.......
ஆங்....... போதும் போதும்" என்றவாறே போகஸ் லைட்டுக்கும் அந்த பெண்ணிற்க்கும் இடையே கபடி ஆடிக்கொண்டுருந்தார் சாமி.


"சாமி.......... போட்டோ படம் யெப்ப ரெடியாவும்?"


கல்யாணி கவரிங் நெக்லஸை கழட்டிக்கொண்டே கேட்ட பெண்ணிடம் "ஏழே முக்கால் பஸ்ஸுலதான ஊருக்கு
போற, வாங்குற சாமானெல்லாம் வாங்கிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு போறப்போ வந்து வாங்கிட்டு போ........ அதுக்குள்ள போட்டு வக்கசொல்லுறேன்".


"திரும்பி வரும்போது மணிக்கூண்டுக்கிட்ட புருஷோத்தம இருப்பான், அவன்கிட்ட நெக்லஸை கில்ட் புடிச்சிக்க, போட்டா யெடுக்குறப்ப லைட்டு
வெளிச்சத்துல அங்கங்க கருப்பா தெரியுது. வேணும்னா கில்ட் புடிச்சதுக்கப்புறம் இன்னொன்ணு எடுத்துக்கலாம்."



சுவற்றுப்பக்கம் திரும்பி வேட்டியை உதறி இடுப்பில் இறுக்கியவர் "உங்களுக்கு யென்ன போட்டோ தம்பி?" என்றவரிடம் போட்டோயெடுக்க உள்ளே நுழையவில்லையென்றாலும் அந்த ரூமில் அவருடன் மேலும் சில நிமிடங்கள் இருக்க விரும்பி "பப்.......பாஸ்போட்" என்றேன் .


அதே சுறுசுறுப்பு, அதே நாலு முழம் , அதே வெற்று மார்பு,வேட்டியில் சுருட்டிய மூக்குபொடி டப்பா, சற்றே தளர்ந்த உடல்.


எங்கள் வீட்டில் அனேகமாக அனைவரும் இந்த ரூமில் நின்று, சிரித்து,பல்மூடி, கைகட்டி அவர் சொன்னதை தட்டாமல் செய்திருக்கிறோம்.
உறவினர் ஒருவர் அதே தெருவில் ஸ்டூடியோ வைத்திருந்தபோதும் எங்களுக்கென்னவோ இந்த ரூமின் மேல் ஒரு இனம்புரியாத ஒட்டுதல்.


போட்டோ எடுத்தப்பின் முன்பகுதிக்கு வந்து கம்யூட்டரில் அமர்ந்திருந்தவரிடம் "தம்பிக்கு பாஸ்போட் நாலு காப்பி" என்றவாறே கேமராவை கொடுத்துவிட்டு மூலையில் இருந்த தூக்குவாளியை எடுத்தவரிடம் "சாமி........ நேத்து வாங்கிட்டு வந்த தோசயில வச்சிருந்த தேங்கா சட்டினி ஊசிப்போயிருந்துது..........
தக்காளி சட்டினி வச்சி கட்ட சொல்லுங்க..........." கம்யூட்டர் ஆசாமியின் குரலுக்கு தலையாட்டியவர் என்னிடம் திரும்பி "தம்பி, நீங்க யெங்கயும் கட கண்ணிக்கு போகணும்னா போயிட்டு ஒரு அர மணி நேரத்துல வாங்க, போட்டு வச்சிருப்பாரு வாங்கிக்கலாம்". "யப்பா, தம்பி அவசரமா போட்டோ யெடுக்க வந்துட்டு போல, பிரிண்ட் போடுறதுக்கு முந்தி கொஞ்சம் சேவிங் பண்ணிடு".


சாப்பாடு வாங்க செல்லும் சாமியை பார்த்தபடியே படியிறங்கினேன் நான்.

Tuesday, November 30, 2010

அந்த மூவர்...

"பால் வந்தாலும் வரலன்னாலும் நீ போடுற காப்பி ஒரே மாதிரி தான் இருக்கும்..."
"என்னய்யா சரகம் கிரகம்னுகிட்டு..."
"என்னடா இது......... ரேசன் கடயில சீனிக்கு நிக்கிற மாதிரி நிக்கிறீங்க...."
.
.
.
.
.
.
.

ஏதாவது புரிஞ்சிதா? ......... இல்லியா??? அப்ப நீங்க அதிகமா தமிழ் சினிமா பாக்க மாட்டீங்க போல.....

சரி, இந்த படங்கள பாருங்க.....






.
.
(படங்கள் : கூகிளாண்டவர்)

இப்ப புரிஞ்சுதா.... இவங்க மூணு பேரு பேசிய வசனம்தான் மேல இருக்குறது....

சமகால குணசித்திர நடிகர்களில் எனக்கு பிடித்த மூவர். M.S.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா.

இவங்க மூணு பேரிடம் உள்ள ஒற்றுமை.

* கதாபாத்திரத்திற்க்கேற்ற இயல்பான நடிப்பு
* வசன உச்சரிப்பில் தேவையான ஏற்ற-இறக்கம்.
* திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமை
(கொஞ்ச நாளா தம்பி ராமையா நெலம கொஞ்சம் பரவாயில்ல)
* நடிப்பு தவிர சினிமாவின் மற்ற பகுதிகளில் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.
இளவரசு : ஒளிப்பதிவாளர்,
பாஸ்கர் : பின்னணிக்குரல் கொடுப்பவர்,
தம்பி ராமையா: இயக்குநர்.
(இதயும் தாண்டி இவங்கள பத்தி நிறய விசயம் இருக்கு.
இப்பதிக்கி இது மட்டும்.)

அடடா........ பதிவ ஆரம்பிச்சாச்சி, இப்ப முடிக்கணுமே என்ன பண்ணுறது..... சரி finishing touch (???) குடுத்துறவேண்டியதுதான்.

சு . பதிவர் : "என்னப்பா எல்லாரும் ரேசன் கடயில சீனிக்கு நிக்கிற மாதிரி நிக்கிறீங்க...."
அ . பதிவர் : "அதுவா,லிவிங் டுகெதர் பத்தி தொடர் பதிவு எழுதப்போறோம். அதா எல்லாரும் தொடர்ச்சியா நிக்கிறோம்"
சு . பதிவர்: "அட என்னப்பா, நம்மள மாதிரி தனி பதிவா போட்டமா, கமெண்ட்ட பாத்தமான்னு இல்லாம தொடர் பதிவு தொடாத பதிவுன்ணுகிட்டு"
அ . பதிவர் : (மனசுக்குள்) " க்க்கும்.....கமெண்ட் போட்டாலும் போடாட்டாலும் நீ போடுற பதிவு ஒரே (???) மாதிரித்தான் இருக்கும்..."

பினா குனா : சு.பதிவர் =சுமார் பதிவர்/அ.பதிவர்= அப்பிராணி பதிவர். இதுல வேற எந்த உள்/வெளி/பக்கவாட்டு குத்தும் இல்லீங்கோவ்வ்வ்வ்வ்.............

Saturday, October 30, 2010

சார் போஸ்ட்.............


"என்னப்பா சமீபமா பதிவையே காணும்?" - அமெரிக்க வாழ் பதிவர் ஒருவர் மின்னஞ்சலில் கேட்டது.

"யோகேஷ்......... ஏங்க என்னாச்சி... கட ரொம்ப நாளா மூடி கிடக்கு" - ஐரோப்பிய நாடுகளில் அலுவல் பயணம் மேற்கொண்டிருந்தாலும் வாரமிருமுறை தவறாமல் அலைபேசும் பதிவர் கேட்டது...

"யோவ்... எதாவது பதிவ போடுய்யா... அதவச்சி எதிர்பதிவ போட்டு கொஞ்ச நாளைக்கு பொழப்ப ஓட்டுவோம்....." - சென்னையிலிருக்கும் நலம்விரும்பி ஒருவர் சாட்டில் சொன்னது....

........
இப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலங்க............. நடக்காதுன்ணும் தெரியும்.....
-------
போஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சேன்னு (அடிக்கடி போட்டுட்டாலும்.....) போஸ்டயே போஸ்ட் ஆக்கிறலாம்ன்ணு ஐடியா பண்ணி அதுக்கான கோதாவுல எறங்கி........... ஸ்ஸ்........ யப்பா..............
மீதிய நீங்களே படிங்க........... இல்ல இல்ல பாருங்க....




அஞ்சல் அலுவலகம்.






அஞ்சல் அலுவலக வாசலில் தனியார் சேவைக்கான பெட்டி.





தபால் பட்டுவாடாவிற்க்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள்.





எங்கள் அடுக்ககதிற்க்கு தபால் கொண்டு வரும் தபால்காரர்.

இவரை தினமும் பார்ப்பதுண்டு.... சிநேக புன்னகையில் ஆரம்பித்து தமிழின் சில கெட்ட வார்த்தைகளை சொல்லித்தரும் அளவுக்கு பழக்கம்.....
36 வருசமாக இப்பணியில் இருக்கிறார்.... நான் பார்த்தவரையில் தன்னுடைய வேலையை அனுபவித்து செய்பவர்....









வீடுகளின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் தபால்பெட்டி....

( தபால்பெட்டியை பற்றி நினைக்கும்போதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி படித்த பாக்கியம் ராமசாமியின் ஜோக் ஒன்ணு எனக்கு ஞாபகத்துக்கு வரும்.. உங்களுக்கு அந்த ஜோக் தெரியுமா???)

தபால்காரரிடம் ஒரு மாஸ்டர் கீ இருக்கும். தன் வாகனத்தில் இருந்தபடியே தபால்களை இப்பெட்டியில் போட்டுவிடுவார்...




அடுக்ககங்களில் இதுபோல் இருக்கும்.

எனக்கு தெரிந்தவரை அமெரிக்காவில் இருக்கும் வாகனங்களில் வலப்புறம் ஸ்டீயரிங் உள்ளவை இரண்டு....
1) பயணிகள் பயன்பாட்டிற்க்கான பேருந்துகள்.
2) தபால் பட்டுவாடா செய்வதற்கான வாகனங்கள்.

வேறு ஏதாவது வாகனங்கள் இப்பட்டியலில் உண்டா??? தெரிஞ்சால் சொல்லுங்களேன்....

Saturday, September 4, 2010

நீச்சல்குளமும் ரெட்டைவால் குருவியும்.


இந்த வாரம் லாங்க் வீக்எண்ட் (Sep 6th Labor day) என்பதால் எங்கு செல்லலாம் என கடந்த மூணு வாரமாக திட்டம் போட்டு ஏற்கனவே போய் வந்த இடம், போகாத இடம், மீண்டும் போகத்தோன்றும் இடம், விமானத்தில் போக வேண்டிய இடம், காரில் போக வேண்டிய இடம் என்று அலசி ஆராய்ந்து கடைசியில் இந்த தடவை எங்கேயும் போகாமல் வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று முடிவு பண்ணியாச்சி...

வெள்ளி இரவு நடுநிசி கடந்தும் தூங்காமல் பொட்டித்தட்டிக்கொண்டுருந்துவிட்டு அப்புறம் SAW படத்தின்
PART-V ம் PART-VI ம் பார்த்து முடித்து தூங்க செல்கயில் மணி காலை 5.30.

மதியம் 3 மணி சுமாருக்கு துகிலெழுந்து, மோட்டு வலையை பார்த்துக்கொண்டு படுத்திருக்கயில், குளத்துப்பக்கம் போலாமே என்ற யோசனை வர, சரி போயி ரொம்ப நாளாச்சேன்னு அபார்ட்மெண்ட்டின் தரைதளத்தில் இருக்கும் குளத்துக்கு கிளம்பினேன்.

எங்க அபார்ட்மெண்ட் குளத்துல குளிக்கறத்துக்கு கொஞ்சம் கெடுபிடி இருக்கும். அங்க உள்ள போர்டுல எழுதிபோட்டுருக்குற வரைமுறை படித்தான் நடந்துக்கணும்... சாரி.... குளிக்கணும்.

குளத்துல இறங்குறத்துக்கு முன்னாடி life guard ஒருத்தர் நம்மகிட்ட "நீச்சல் தெரியுமா?", "இதுக்கு முன்னாடி குளிச்சிருக்கியா"(பாத்ரூமுல இல்ல குளத்துல...)? அப்படீன்னு குறுக்கு விசாரணையெல்லாம் பண்ணிட்டு "OK, you can get into the pool now" அப்படீன்னு சொல்லிட்டு கைல ஒரு பட்டய கட்டிவிடுவார்.

நான் போனப்ப எப்போதும் இருக்குற life guard இல்ல, அவருக்கு பதிலா புதுசா ஒரு பொண்ணு ஒக்காந்துருந்துச்சி... என்ன பாத்து என்ன நினச்சிதுன்னு தெரியல, எதுவும் கேக்காமலே "Sir, you can get in" அப்படீன்னு சொல்லிட்டு கைல இருந்த ஐபோன நோண்ட ஆரம்பிச்சிடுச்சி...

எங்க வீட்டு குளத்துல( அட நாம இருக்குற வீட்ட நம்ம வீடுன்னு சொல்லுறது இல்லியா? அப்ப நம்ம வீட்டுல இருக்குற குளத்தை நம்ம வீட்டு குளம்னு சொல்லலாம்ல...) குளிக்க வந்தவங்க உடனே குளத்துல எறங்க மாட்டாங்க.... குளக்கரை ஓரமா மெதுவா ரெண்டு மூணு ரவுண்டு சுத்தி வருவாங்க. அப்புறமா குளத்த சுத்தி போட்டுருக்குற கட்டில்ல குப்புற பத்து நிமிசம், மல்லாக்க பத்து நிமிசம் படுத்திருப்பாங்க.... அப்புறம் கொண்டு வந்திருக்கிற புத்தகத்த பத்து நிமிசம் படிப்பாங்க.... அப்புறம் i-pod ல பத்து நிமிசம் பாட்டு கேப்பாங்க.... அப்புறம் கூட வந்திருக்குற பாப்பா வாயில தேனு இருக்கானு வாயால ஆராய்ச்சி பண்ணுவாங்க..... அப்புறமா தண்ணியில குதிப்பாங்க..... இப்படியெல்லாம்
பண்ணினாதான் பிரபல பதிவராம்... அய்யோ. மறுபடியும் சாரி.... பிரபல நீச்சல்காரராம்.....


குளிக்க(?) சென்றபோது எடுத்த போட்டோ.

ம்ம்ம்... நமக்கு தேனு எடுக்கறத்துக்கு எல்லாம் ஏது கொடுப்பினை.... அப்புறம் நாம இருக்குற கலருக்கு சூரியன பாத்து மல்லாக்க படுத்தா என்ன ஆவறது.... அதனால ஒரு ஓரமா நிழல்ல கிடந்த கட்டில்ல போயி படுத்துக்கிட்டு கைல எடுத்துட்டு போயிருந்த நம்ம பழமைப்பேசி அண்ணனோட ஊர்பழமை புத்தகத்த எடுத்து ஏற்கனவே படிச்சி விட்ட இடத்துலெருந்து படிக்க ஆரம்பிச்சேன்.....

பத்து நிமிசம் கழிச்சி புத்தகத்த நெஞ்சில் மல்லாத்தி விட்டு i-pod ட எடுத்தேன்... ஓவ்வொரு பாட்டா scroll பண்ணும்போது கண்ணில் பட்டது அந்த பாட்டு. பாட்டை select செய்வதற்க்குள் மனசு குளத்த தாண்டி, வீட்டை தாண்டி, ஏர்போர்ட் போயி, பிளைட் புடுச்சி கண்டம் விட்டு கண்டம் தாண்டி மெட்ராஸ்ல எறங்கி பஸ் புடிச்சி எங்க ஊரு குளக்கரைக்கு சென்றுவிட்டது.....

சின்ன வயசுல ஒருநாள் ஊரு குளத்துல குதியாளம் போட்டுக்கொண்டுருக்கயில் காற்றுவாக்கில் காதருகில் வந்த பாட்டு. அப்போது இன்னார் இசையில் வந்த பாட்டுன்னோ, இன்னார் பாடிய பாட்டுன்னோ, இந்த படத்தில் வந்த பாட்டுன்னோ தெரியாது. மொத தடவயா கேக்கும்போது என்னையுமறியாமல் உடம்பில் ஒரு சிலிர்ப்பு தெரிஞ்சிது....

இன்னக்கி கேக்கும்போதும் என்னால் அந்த சிலிர்ப்பை உணரமுடிந்தது....

அமெரிக்க நீச்சல்குளத்தில் இருந்து எங்கள் ஊர் தாமரைகுளத்திற்க்கு சடுதியில் என்னை அழைச்சிட்டு போன இந்த பாட்டை நீங்களும் கேட்டுபாருங்களேன் (ஏற்கனவே கேட்டுருந்தாலும்.)




டிஸ்கி : கண்ணை மூடி இந்த பாட்டயே திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருந்ததுனால நேரம் போனதே தெரியல.... படுத்திருந்த கட்டில் திடீர்ன்ணு ஆட, கண்ண தொறந்து பாத்தா life guard பெண், "Sorry Sir, the pool time is closed, you gotta leave the pool in five minutes.. " ன்னு சொல்லிட்டு போச்சு.

ம்ம்ம்... குளிக்க வந்ததுக்கு இதவாச்சும் செஞ்சிட்டு போவோம்னுட்டு ரெண்டு காலையும் தண்ணியில நனைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்....



Friday, September 3, 2010

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா திருமண வீடியோ

03-SEP-2010 அன்று நடைபெற்ற நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமண வீடியோ.

*********************************************************************************
பதிவில் indianiteracts வலைத்தல முகவரியில் உள்ள வீடியோவிற்க்கு பதிலாக indiaglitz வலைத்தல முகவரியில் உள்ள வீடீயோ இணைக்கப்பட்டுள்ளது.
*********************************************************************************

ஆறு நிமிடம் இருபத்தி ஆறு வினாடிகள் உள்ள வீடியோ தொகுப்பு.மிக தெளிவாகவும்
திருமண விழாவின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

மராத்திய பாரம்பரிய தலப்பாகையுடன் ரஜினி.வீடியோ முழுவதும் சிந்தனைவயப்பட்டவராகவே இருக்கிறார்.நீங்களே பாருங்களேன்.




நன்றி : indiaglitz வலைத்தளம்,பதிவர் சித்ரா.

டிஸ்கி : நீங்க ஓட்டு போட்டா மத்தவங்களும் இந்த வீடியோவ பாப்பாங்க....

Monday, August 23, 2010

இதுக்கு என்ன பேர் வைக்கலாம்?

"வேதாசலம், ஒவ்வொரு கூட்டத்துலயும் ஒன்னோட பேச்சுக்கு அப்ளாஸ் அள்ளுதுய்யா. சாதிய எதுர்ப்பு பத்தி நீ பேசுறத மணிக்கணக்கா கேட்டுக்கிட்டே இருக்கலாம். சும்மாவா, உனக்கு கச்சியிலயும் ஆட்சியிலும் முக்கிய பதவி கொடுத்து என் கூடவே வச்சிருக்கேன்.சரிய்யா, நா கிளம்புறேன், நாளக்கி பொதுகுழுக்கு சீக்கிரம் வந்து சேரு.........." கிளம்பிய கட்சி தலைவருக்கு கையசைத்த வேதாசலம் தனது ரெட்ட நாடி சரீரத்தை திணித்துக்கொள்ள, சைரன் அலறலுடன் புறநகர் பங்களா நோக்கி சீறியது வேதாசலத்தின் கார்.

"சொல்லு குமரா, ஏதோ பேசணும்ன்னு சொன்னியே", கண்ணாடியை பனியனின் உள்பக்கத்தில் துடைத்தவாரே மகனை ஏறிட்டவரின் எதிரில் வந்தமர்ந்தான் குமரன்.


"அப்பா, நா ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்..... " பேசிக்கொண்டு இருந்த குமரனை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார் வேதாசலம்.

படபடவென சொல்லி முடித்து, வேதாசலத்தின் முகபாவத்தை படிக்க முயற்சி செய்துகொண்டிருந்த குமரனுக்கு அப்பாவின் அந்த கேள்வி சற்றே சந்தோசத்தை கொடுத்தது. இதழோரம் வரவைத்துக்கொண்ட புன்னகையிணூடே "நீங்க, கண்டிப்பா கேப்பீங்கன்ணு தெரியும்பா, அவளும் நம்ம ஜாதிதான்............".
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஹலோ, எங்க கிளம்பிட்டீங்க, கத இன்னும் முடியல...... கொஞ்சம் கீழே படிங்க....

"குமரா, இந்த கல்யாணம் நடந்தா என்னோட அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாயிடும். அவளை மறக்குற வழிய பாரு........... " முடிவாய் சொல்லிவிட்டு தன்னறைக்கு செல்லும் வேதாசலத்தை பார்வையால் வெறித்துக்கொண்டிருந்தான் குமரன்.

Wednesday, August 18, 2010

வருத்தப்படாத வாலிபால் சங்கம்(ஸ்தாபிதம்:மார்ச்-2008)


2008 ல் ஆரம்பித்த ஒரு விசயம் நேற்று வரை தொடர்கிறது.....

என்னதான் நடந்துச்சின்னு நீங்களே படிங்களேன்....

2008 மார்ச் மாசத்துல ஒருநாள் ஆஃபீஸ்ல வாலி பால் லீக் மாட்ச் நடக்கப்போவுதுன்னு மெயில் அனுப்புனாங்க. ஊருல ஸ்கூல் / காலேஜ் டைமுல விளையாடி இருக்கறததுனால நானும் ஒரு டீம் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன். டீம் பேரு v.v.s ( "வருத்தப்படாத வாலிபால் சங்கம்")

டீம் ரிஜிஸ்டர் பண்ணியாச்சி, இப்ப டீமுக்கு ஆளு சேக்கணுமே... ஒரு வழியா ஆஃபீஸ்ல ஒரு மூணு பசங்கள தேத்தித்டேன்.(கோவை ப்ரதர்ஸ் படத்துல சத்தியராஜூம் வடிவேலும் கிரிக்கெட் விளயாட ஆள் புடிப்பாங்களே, அந்த மாதிரி....)

அடுத்ததா ஒரு பிரச்சினை, மேட்ச் ரூல்படி ஆறு பேருல ரெண்டு லேடீஸ் பிளேயர் கண்டிப்பா இருக்கணும். ஒரு வழியா இன்னொரு டீம்ல உள்ள ஒரு வெள்ளக்கார புள்ளைய கரெக்ட் பண்ணி, அந்த புள்ள வழியா அதோட கேர்ல் ஃபிரண்ட கரெக்ட் பண்ணி ( என்னமோ அவனோட கேர்ல் ஃபிரண்ட் மாதிரி சொல்லுரானேன்னு நீங்க நினைப்பீங்க,சும்மா எழுதும்போதாவது இப்படி எழுதி மனசதேத்திக்கலாம்ணுதான்) ஆறு பேர் ரெடீ பண்ணிட்டேன்.

அப்பாடா.... ஒரு வழியா எல்லாம் முடிஞ்சிது, களத்துல எறங்க வேண்டியதுதான் பாக்கின்னு நினச்சிக்கிட்டு இருக்கும்போது டீம் என்ரோல்மென்ட் பீஸ் 400$ கட்ட சொல்லி மெயில். ( 400$ பத்தி முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த ஏரியா பக்கமே எட்டி பாத்துருக்க மாட்டேன்....) . அந்த ரெண்டு வெள்ளக்கார புள்ளங்க கிட்ட பங்கு கேட்டா "உங்க கூட விளயாடுரதே அதிகம்.. இதுல பங்கு காசு வேற கொடுக்கன்னுமான்னு கோச்சிகிட்டு கா விட்டுருவாங்கலோண்ணு பயம். ஒருவழியா 400$ல பசங்க நாலு பேரு மட்டும் பங்கு போட்டு கட்டுனோம். பணத்த கட்டிட்டு நாங்க நாலு பேரும் ஆளு வச்சி அழுது தீர்த்ததுதனிகதை.

ஒரு நல்ல நாளா பாத்து (நம்ம ஊருன்னா பஞ்சாங்கம் பாக்கலாம், இது அமெரிக்கா இல்ல அதனால வெதர் ரிபோர்ட்.) மாட்ச் ஆரம்பிச்சாங்க. அப்படி இப்படி ன்னு விளையாடி 24 லீக் கேம்ல 19 கேம் . பண்ணி Rank-1 வந்துட்டோம் .

லீக் மாட்சில win பண்ணி அடுத்த லெவெல்க்கு போனா பாடிகாட் முனீஸ்வரருக்கு பதினொரு தேங்கா உடைக்கறதா வேண்டி இருந்தேன். லீவுக்கு இந்தியா வரும்போது முதல் வேலையா அத நிறைவேத்தனும்.

ஒரு வழியா Semi-finals ம் Win பண்ணி Final மாட்ச்க்கு ஸெலெக்ட் ஆகிட்டோம். நிறைஞ்ச அமாவாசை அன்னைக்கி Final மாட்ச் நடந்துச்சு. அமெரிக்கால இருக்குறவனுக்கு அமாவாசைய பத்தி எப்படி தெரியும்னு நினைக்காதீங்க. வீட்டுல தமிழ் மாச காலண்டர் வச்சிருக்கோமுல்ல.

Final மாட்ச்ல நமக்கு கிரகம் சரியில்ல, அதனால “Runner-Up.” தான் கிடைச்சிது. “Runner-Up”னா சும்மாவா, வெற்றி கனியை தொட்டு பாத்துட்டு வந்துருக்கொமிலான்னு சவுண்ட குடுத்துக்கிட்டு திரிஞ்சோம். அப்படியே 2009 மேட்ச்ம் நடந்தது, அதுலயும் "Runner-Up".

2010க்கான league மாட்ச் ஏப்ரல்ல ஆரம்பிச்சி நேத்து முடிஞ்சிது, வழக்கம்போல final மாட்சில "Runner-Up".

ம்ம்ம்….. மூணு வருசமா “Runner-Up” டைடீல் வாங்கினததுனால இந்த உலகம் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு………..

இன்னும் எத்தனை நாளைக்குதான் விளையாட தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது……..

Thursday, July 29, 2010

ஓ-ஞாநி:பத்திரிக்கை சுதந்திரம்-பறிக்கப்படும் தந்திரம்

"உருப்படியா எழுத விடாம உருளைகிழங்கை பத்தி எழுத வக்கிராங்க..." , ஜுலை 6ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு அமெரிக்காவின் - அட்லாண்டிக் எக்ஸ்பிரஸ்வேயில் காரில் சென்று கொண்டு இருக்கயில் ஞாநி சொன்ன வார்த்தை......


அன்றிரவு கார் பயணத்தில் குமுதம்- ஓ பக்கங்கள் சம்பந்தமான பேச்சே அதிகம் பயணித்தது. வார்த்தை முடிவுகள் கடிதமாய் மாறியுள்ளது இப்போது......


சமீப காலமாய் ஞாநியின் கட்டுரைகளின் சில சாராம்சங்கள் குறிப்பாக அரசுக்கு, ஆளும் கட்சிக்கு எதிரான விசயங்கள் குமுதம் நிர்வாகத்தால் நீக்கப்பட்டோ அல்லது திருத்தப்பட்டோ வெளிவந்தன. மேல்மட்ட நிர்வாகத்தில் வந்துள்ள பிரிவினை இதற்கான அடித்தளம் என்று தெரிகிறது...


"எழுத்தில் சமரசம் என்பது எனக்கு ஒத்துவராத விசயம், இந்தியா திரும்பியவுடன் என்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்பதே அவருடைய இறுதி முடிவாய் இருந்தது. அந்த முடிவு மின்னஞ்சல் வாயிலாக குமுதத்தை சென்றடைந்திருக்கிறது.


குமுதம் வார இதழில் தன்னால் ஓ பக்கங்கள் கட்டுரையை தொடர்ந்து எழுத முடியாததற்கான காரணங்களை தெரியப்படுத்தி அதனை தனது வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.



ஞாநி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதங்கள்












எனக்கு ஒரே ஒரு சந்தேகம் : பத்திரிக்கை (சு)தந்திரம், அச்சு ஊடக (அ)சாத்தியம், ஊடக தார்(மீகம்) அப்படீனெல்லாம் பேசுறாங்களே... அப்படின்னா என்னங்க???


(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )


Wednesday, July 28, 2010

காற்று வாங்க போன கலைஞர். கல்லா கட்டிய ஜூ.விகடன்

இரண்டு வரிகளில் எதுகை மோனையாக தலைப்பு வைத்து கவர் ஸ்டோரி போட்டு கல்லா கட்டுவதில் வார இதழ்கள் கை தேர்ந்தவை. ஜூனியர் விகடன் மற்றும் குமுதம்-ரிப்போர்ட்டர் இதழ்களுக்குள் இதில் போட்டியே நடக்கும்.


"வரும்படிக்கு வழி செய்யும் வார்த்தை விந்தைகளை வாரஇதழ்கள் வழக்கமாக (அட.... நமக்கு கூட வருது...) பயன்படுத்துவார்கள். சாதாரண விசயத்தை தலைப்பில் பூதாகரமாக்கி உள்ளே படிக்கையில் புஸ்ஸ்......... என்று போக வைக்கும் பல விசயங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம் இந்த புதனன்று ஜூனியர் விகடனில் வந்துள்ள "கடற்கரையில் காத்து வாங்க போன கலைஞரின்" கவர் ஸ்டோரி.





ஜூனியர் விகடன் - அட்டை படம் & கவர் ஸ்டோரிக்கான தலைப்பு . இந்த வரிகளின் அர்த்தத்தை ஒருமுறை மனத்தில் நினைத்துக்கொண்டு கீழே உள்ள படத்தில் கட்டம் கட்டிய வாக்கியங்களை படியுங்கள்...










அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் ஒவ்வொரு அசைவிற்க்கும் அர்த்தம் கற்ப்பித்து இவர்கள் போடும் கவர் ஸ்டோரி பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும்.


"ஆளுங்கட்சிக்கு ஆப்பு... அம்மாவின் அதிரடி" என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி போடுவார்கள். உள்ளே படித்தால் "ஜெயலலிதா புதிதாக வாங்கியுள்ள வெளிநாட்டு டீவியில் கலைஞர் டீவி அல்லது சன் டீவியை செலக்ட் செய்தால் டீவி தானாகவே ஆஃப் ஆகிவிடுமாம்...." என்ற ரேஞ்சிக்கு மேட்டர் இருக்கும்...


ரஜினியின் புதுபட ரிலீசின்போது வாரஇதழ்களில் "அரிதாரத்துக்கு சலோ ... ஆன்மீகத்துக்கு ஹலோ", "சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பிளான்" என்ற மாதிரியான தலைப்பில் "ரஜினி இந்த படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு" என்று ஒரு கவர் ஸ்டோரி கட்டாயம் வெளிவரும்.


சிவாஜி படம் படபிடிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், "சிவாஜி படத்தின் கதை", "தமிழ் இதழ்களில் முதல்முறையாக" என்று பில்டப் கொடுத்து ஒரு கதையை போட்டு இருந்தார்கள்
( குமுதமா இல்ல ஆ. விகடனான்னு சரியா ஞாபகம் இல்லை...) படம் வந்த பிறகு படத்தின் கதைக்கும் அவங்க போட்டுருந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை.


ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்கள் பண்ணும் அளப்பரை.... ஸ்ஸ்........... யெப்பா.. தாங்க முடியலை.போகிற போக்கை பார்த்தால் பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலை மைய்யப்படுத்தி "கலைஞரின் கடைசி தேர்தலாய் மாறப்போகும் கண்ணம்மா பேட்டை கவுன்சிலர் தேர்தல்" அப்படீன்னு கவர் ஸ்டோரி போட்டாலும் போடுவார்கள்.


இது போன்ற கவர் ஸ்டோரி மேட்டரை பார்க்கும்போது "புலி வருது" கதைதான் ஞாபகத்துக்கு வருது.....







(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )

Thursday, July 15, 2010

பாவம் இந்த கிளி...

பாவம் இந்த கிளி... யாராவது வேலை கொடுங்கப்பா....




மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பர் ஹேம்ராஜ்க்கு நன்றி.

Wednesday, July 14, 2010

அமெரிக்காவில் ஞாநியுடன் மூன்று நாட்கள்.


எழுத்தாளர், அரசியல் விமர்சகர்,பத்திரிக்கையாளர், திரைப்பட,
குறும்பட/ தொலைக்காட்சி தொடர்கள் இயக்குநர், நாடகாசிரியர் (உஸ்...........யப்பா.. கண்ண கட்டுதே...) ஞாநி அவர்கள் ஜூன் 18 முதல் ஜுலை 11 வரை அமெரிக்காவில் பல பகுதிகளில் சுற்று பயணம் மேற்க்கொண்டார். ஜுலை 6,7,8 தேதிகளில் பிலடெல்பியாவில் எம்முடைய விருந்தினராக....

தினமும் இரவு 2 மணி வரை பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.

மனிதர் ரொம்பவும் எளிமையாக இருக்கிறார். முதல் நாள் அவரை அழைத்து வரும்போது நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டுமே என்று சற்றே படபடப்போடு இருந்தேன். இரவு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததால் காலையில் நான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்க "யோகேஷ், காப்பி சாப்பிடலாமா..." என்று திடீர் குரல் கேட்டு எழுந்தேன். கையில் காப்பி கோப்பையுடன் ஞாநி.... அதுமுதல் மூன்று நாட்களும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்.

முதல் நாள் அட்லான்டிக் சிட்டியில் உள்ள கேசினோ சென்று வந்தோம். இரவு நேர கார் பயணம் சோம்பலாக இல்லாமல் வெகு அருமையாக இருந்தது அவருடன் பேசிக்கொண்டே செல்கையில்.

மறுநாள் பிலடெல்பியாவில் லங்காஸ்டர் பகுதியில் உள்ள "ஆமிஷ் வில்லேஜ்" சென்றோம்.
(ஆமிஷ் மக்கள், அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விவரங்களுடன் விரைவில் ஒரு பதிவெழுத எண்ணம்.)

நான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தும் பகுதியில்...



ஆமிஷ் வில்லேஜ்ல் ஞாநியுடன் நான்...


வரும் வழியில் மதிய உணவை முடித்துக்கொண்டு, பல விசயங்களை பேசிக்கொண்டு வந்தோம்.... பேச்சு பதிவுலகம் பக்கமும் பயணித்தது (ஆதியின் நர்சிம் பேட்டி முதல், மங்களூர் சிவாவின் செந்தழல் ரவிக்கான பதில் பதிவு வரை....)

வழியில் காரில் கடந்த ஒரு பாலத்தை அவரிடம் காட்டி "சார், இதுதான் பெஞ்சமின் பிராங்க்ளின் பாலம்" என்று சொல்ல "அப்படியா, பெஞ்சமின் எனக்கு பிடித்த மனிதர், அவர் ஒரு விசயத்தை கண்டுபிடித்தார், என்னனு சொல்லுங்க பாப்போம்" என்று அவர் என்னை திருப்பி கேக்க, நான் அவரை பார்த்த பார்வையில் அவரே பதிலையும் சொன்னார், மின்னலில் மின்சாரம் இருக்கிற விசயத்தை கண்டுபிடித்தவராம் பெஞ்சமின்.(நமக்கு மின்னலில் கண்டுபிடிக்கப்பட்ட ரீமாசென்ஐ பற்றி கேட்டால் தெரியும். நம்மகிட்ட போயி அந்த மின்னல பத்தி கேட்டா...)

பிலடெல்பியாவில் நடைபெற்ற "பிட்லர் ஆன் தி ரூஃப்" என்ற ஒரு மேடை நாடகத்தை பார்க்க ஆசைப்பட்டார், டிக்கெட் கிடைக்காததால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

இரவு உணவுக்குப்பின் நாங்கள் இருவரும் உரையாடியதை வீடியோவாக (ஹலோ, ஏன் பேட்டின்னு சொன்னவுடனே பேஸ்தடிச்சி பதிவ மூடிட்டு கிளம்புரீங்க... தொடர்ந்து படிங்க)
பதிவு செய்தேன். விரைவில் உங்கள் பார்வைக்கு.

மூன்றாம் நாள் டிரென்டன் ரயில் நிலையத்தில் நியூயார்க் செல்வதர்க்காக வழியனுப்பி வைத்து விடைப்பெற்றுக்கொண்டேன்.


டிரென்டன் ரயில் நிலைய முகப்பில் ஞாநி....

அவருடனான எனது மூன்று நாட்கள் ஒரு இனிய அனுபவம்......

ஞாநி சார் : நன்றிகள் பல.....

(ஞாநியின் வலைத்தளம் : http://www.gnani.net )

Saturday, July 10, 2010

FeTNAவும், பழமைபேசியும், நானும்...


வணக்கங்க யோகேஸ்வரன், நலமா இருக்கீங்களா" என்று தொலைபேசி உரையாடலை இவர் தொடங்கும்போது அவருடைய உற்சாகம் நம்மயும் தொற்றிக்கொள்ளும்.

FeTNA விழாவுக்கு அவசியம் வாங்க என்று இவர் அழைத்தபோது முடிந்தால் போவோம் என்று நினைத்து முன்பதிவு செய்தேன்.விழாவின் முதல்நாள் அலுவலகத்தில் ஆணிகள் பல. விழாவிற்க்கு செல்ல வேண்டாம் என்று நினைத்த என்னை இரண்டாம் நாள் விழாவில் கலந்துகொள்ள வைத்தது இவருடைய நேரடி வர்ணனை....

விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை முகம் கோணாமல் செய்து,பதிவுலக நண்பர்களை அறிமுகப்படுத்தி, உபசரித்து .... இன்னும் பல சொல்லலாம்.



அப்துல்லாவுடன் பழமைபேசி


பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் பழமைபேசி


பழமைபேசி எழுதிய "ஊர்ப் பழமை" புத்தகம் விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. நானும் ஒன்று வாங்கியுள்ளேன் (ஹலோ, ஓசியில இல்லங்க, காசு கொடுத்துத்தான், நம்புங்க...)

புத்தகத்தின் முதல் பக்க அட்டை



புத்தகத்தின் கடைசி பக்க அட்டை

நேற்று அலைப்பேசியில் அளவளாவிக்கொண்டிருக்கயில் "பழமை அண்ணே, விழாவுக்கு அவளவு தூரம் வந்துட்டு திரும்பியது களைப்பாக இருக்கிறது, இந்த வீக் எண்ட் ஃபுல்லா வீட்டுல ரெஸ்ட் தான், நீங்க பாவம் ரொம்ப களைப்பா இருப்பீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க"னு சொன்ன எனக்கு அவரின் பதில்.

"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல...."

பழமைபேசி அண்ணே, உங்கள நெனச்சா எனக்கு தசவாதாரம் படத்துல வர இந்த வசனம்தான் ஞாபகம் வருது.

"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்."



அமெரிக்காவில் அப்துல்லா.....


FeTNA விழாவின் கவியரங்கம் மற்றும் இலக்கிய வினாடி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவின் Connecticut நகருக்கு வருகை புரிந்த அப்துல்லாவை விழாவின் இரண்டாம் நாளில் சந்தித்தேன்.

நான் சந்தித்த சமயம் அவருடைய அலைப்பேசியை காணவில்லை (ஹலோ.. என்ன ஏன் சந்தேகமா பாக்குறீங்க???). பழமைப்பேசி,இளா,நசரேயன் உடன் நானும் சேர்ந்து எல்லாரும் அவரவர் மொபைல்லில் அவருடைய நம்பருக்கு தொடர்புகொள்ள, தொலைந்த மொபைல் வரவேற்ப்பறை பகுதியில் இருப்பதாக தெரிந்து அங்கே சென்றோம். "உங்க மொபைல் எப்படி இருக்கும்? அடையாளம் சொல்லுங்க" என்று கேட்டவரிடம் "மொபைல்ல குடுங்க பாத்து அடயாளம் சொல்லுறேன்"னு அப்துல்லா கலாய்க்க, ஒரு வழியாய் மொபைல் அப்துல்லா கைக்கு திரும்ப வந்தது.

அப்துல்லாவுடன் நான்...

அவர் பங்குபெரும் நிகழ்ச்சிகள் முடியும் வரை சற்றே பதட்டமாய் இருந்தவர் (டெடீகேசனாம்..) அதன் பிறகு பட்டாசு கிளப்பினார்... "மதுரை வீரன்" தெருக்கூத்து நிகழ்ச்சியின் போது அப்துல்லா அடித்த விசில் சத்தம் பிரமாதம்.

நானும் அப்துல்லாவும் இரவு சாப்பிட போகும்போது ஒரு சுவாரசியமான மேட்டர் நடந்தது . அதைப்பற்றி இந்த பதிவில் எழுதிஇருக்கிறேன்.

இலங்கைப் பொருள்களை புறக்கணிக்க சொல்லி ஒரு குழுவினர் பறை அடித்து சொல்லிக்கொண்டிருக்க, அப்துல்லாவும் அவர்களுடன் சேர்ந்து பறை அடித்து அமர்களப்படுத்தினார். இனிமே நாம யாரும் இலங்கை பிரச்சினைக்காக அப்துல்லா என்ன பண்ணினார்ன்னு கேக்கமுடியாது. அவருடைய நிலைப்பாட்டை "பறை அடித்து" பறைசாற்றி இருக்கிறார்.


பறையுடன் அப்துல்லா...


பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் அப்துல்லா...

விழாவின் இறுதி நாளின் மதியவேளை வரை அவருடன் இருந்தேன். மனிதர் ரொம்ப இனிமையாக பழகுகிறார்.... நேற்று மாலை விமான நிலயத்தில் இருந்து தொலைபேசியில் விடைபெற்றுக்கொண்டார்.

தங்களை நேரில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே. FeTNAவில் அப்துல்லாவை நான் சந்திக்க ஏற்பாடு செய்த அண்ணன் பழமைபேசிக்கு எனது நன்றிகள்..

Monday, July 5, 2010

FeTNA விழாவில் நடிகை பிரியாமணிக்கு முத்தம் - இன்ப அதிர்ச்சியில் பதிவர்.



அமெரிக்காவின், ஜுலை 3,4 தேதிகளில் நடைபெற்ற FeTNA - 2010 விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பிரியாமணி கலந்து கொண்டார்.ஜூலை 4 ம் தேதி, விழாவில் பதிவர் ஒருவருக்கு பிரியாமணியால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி....

அந்த பதிவர் யாருன்னு தானே கேக்குறீங்க : ஹி ஹி ஹி, நானேதான்.

அந்த சம்பவம் நடந்தப்ப ராத்திரி 8 மணி இருக்குங்க, நானும் அப்துல்லாவும் பசிக்கிதேன்னு பழமைபேசிக்கிட்ட இருந்த சாப்பாட்டு டோக்கனை வாங்கிக்கிட்டு நைசா சாப்பாடு போடுற ஏரியா பக்கமா ஒதுங்கினோம். சாப்பாட்ட ஒரு கட்டு கட்டிட்டு சாப்பாடு தட்ட குப்பையில போடுறதுக்காக
போயிக்கிட்டு இருந்தோம்.. போற வழியில ஒரு பெரிய FAN வச்சிருந்தாங்க.. கல்யாணமண்டபத்திலலாம் வப்பாங்கள்ல...... அந்த மாதிரி பெரிய FAN.

நான் அந்த FAN கிட்ட போகும்போது என்னோட சாப்பாட்டு தட்டுல நான் வாய் தொடச்சிட்டு வச்சிருந்த பேப்பர் நாப்கின்

[ நம்மூருல இத டிஷ்யூனு சொல்லுவோம். இந்தூருல பேப்பர் நாப்கின்னு சொல்லுவாங்க. இந்த ஊருக்கு வந்த புதுசுல ஒரு ஓட்டல்ல வாய் தொடக்கிற டிஷ்யூ குடுங்கனு கேட்டதுக்கு, அங்க இருந்த அகராதி புடிச்ச பய புல்ல, "தம்பி, வாய் தொடக்கிற நாப்கின்னு கேளு, டிஷ்யூவால தொடக்கிற இடம் வேறன்னு சொல்லி நம்மள டேமேஜ் பண்ணுச்சி.... அது ஒரு தனி கதை... அத பத்தி அப்பாலிக்கா பேசுவோம்.]

சரி எங்க உட்டேன், ஆங்... நாப்கின்ல... என்னோட சாப்பாட்டு தட்டுல நான் வாய் தொடச்சிட்டு வச்சிருந்த நாப்கின் FAN காத்துல சட்டுனு பறந்து போயி FANக்கு நேரா ஒக்காந்து சாப்டுகிட்டு இருந்த பிரியாமணி கன்னத்துல பட்டு கீழ விழுந்துது. டக்குன்னு
திரும்புன பிரியாமணி அதோட கன்னத்துல கை வச்சி பாத்துச்சி. கீழ கிடந்த napkina பாத்திச்சி, எனக்கா பதட்டதுல ஒண்ணும் புரியல... ஞே!!! ன்னு முழுச்சிகிட்டு நிக்கிறேன். பிரியாமணியையும் FANயும் மாத்தி மாத்தி பாக்குறேன். நா முழிச்ச முழியில அதுக்கு என்ன நடந்துருக்குன்னு தெரிஞ்சி போச்சி. என்ன பாத்து லேசா சிரிச்சிது... என்னோட குரல் எனக்கே கேக்காத மாதிரி "சாரி" ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

ராத்திரி ஓட்டல் ரூமுல அர தூக்கத்துல இருந்த அப்துல்லாவ எழுப்பி, "ஏண்னே, நான் வாய் தொடச்ச நாப்கின் காத்துல பறந்து போயி பிரியாமணி கன்னத்துல பட்டுச்சில்ல,அப்ப நான் பிரியாமணிக்கு முத்தம் கொடுத்ததா தானே அர்த்தம்?"ன்னு கேட்டா, கொலை வெறியில் அடிக்க வரார்......

இந்த பதிவ படிக்கிற நீங்களே சொல்லுங்க, நான் பிரியாமணிக்கு முத்தம் கொடுத்ததா தானே அர்த்தம்?




Saturday, July 3, 2010

அமெரிக்காவில் ஞாநி....




ஞாநி அவர்கள் கடந்த இரு வாரமாக அமெரிக்க சுற்று பயணத்தில் இருக்கிறார். தற்சமயம் நியூஜெர்ஸியில்..

July 6,7,8 தேதிகளில் எம்முடைய விருந்தினராக தங்குகிறார். அட்லாண்டிக் சிட்டியில் உள்ள CASINO மற்றும் பிலடெல்பியாவில் உள்ள AMISH VILLEAGE அழைத்து செல்ல உத்தேசம்...

ஞாநியை சந்திக்க விரும்பும் பிலடெல்பியா பகுதி பதிவர்கள் என்னுடைய மின்னஞ்சலில்(vazhippokkann@gmail.com) தொடர்பு கொள்ளவும்...

ஞாநியின் வலைத்தளம் : http://gnani.net


Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாடு : நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சி


செம்மொழி மாநாட்டு இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக
எனது தந்தை, தவில் கலைஞர் "கலைமாமணி" தலைச்சங்காடு T.M.ராமநாதன் அவர்கள் பங்குபெறும் நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சி வியாழன் காலை (24-ஜூன்) 9.30 முதல் 10.30 வரை நடைபெறுகிறது...

தொலைக்காட்சி நேரலையில் காணலாம்....

Tuesday, June 22, 2010

ராவணன் : ஒரு வரியில்....



மைக்ரோஓவனில் வேக வைத்த புளித்து போன பழைய சாதம்....



Sunday, June 6, 2010

அமெரிக்காவில் Y.G. மகேந்திரா & லக்ஷ்மன் ஸ்ருதி இசைகுழு


Y.G. மகேந்திராவின் "மௌனம் சங்கடம்" என்ற நாடகமும் ,லக்ஷ்மன் ஸ்ருதியின் இசை நிகழ்ச்சியும் "தமிழ்நாடு அறக்கட்டளை"யின் 35வது மாநில மாநாட்டின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சென்ற வாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்த்தவை சில பதிவாய்.....

தம்பதி சமேதராய் மேடையேறினார் Y.G.மகேந்திரா . எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மேடை ஏறுகிறாராம் திருமதி Y.G.M. நாடகத்தின் பல இடங்களில் Y.G.M யை விட நன்றாக ஸ்கோர் செய்தார் அவரது திருமதி.

நாடகம் முடிந்ததும் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் "அன்பாலயம்" இல்லத்தில் மனநலம் குன்றிய குழந்தைகள் பற்றி தான் நேரில் பார்த்து வந்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

தனது நாடகங்கள் மூலம் வரும் வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதம் தமிழ்நாடு அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்தார்.

அடுத்ததாக(அறக்கட்டளை நன்கொடையாளர்கள் மற்றும் திறம்பட செயல்பட்டவர்களை கௌரவித்தப்பின்) லக்ஷ்மன் ஸ்ருதியின் இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

B.H.அப்துல் ஹமீது தன்னுடை காந்த குரலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ரீமிக்ஸ் பாடல்களை பற்றி தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார்.

தனது தந்தையார் பாடிய பாட்டுக்களை அவர் குரலிலேயே பாடினார் T.M.S.செல்வகுமார். தமிழ் சினிமா உலகம் இவரை கண்டுகொள்ளாதது ஏனோ?

"வணக்கம் சொன்னா பதிலுக்கு வணக்கம் சொல்லணும்"ன்னு சொல்லி முதல் பாடல் பாடும்முன் பார்வையாளர்களிடம் பல்பு வாங்கினார் மகதி.

நிகழ்ச்சிக்கு Sound Engineerஆக இருந்த அமெரிக்க இளைஞர் பாவம்,ஒவ்வொரு மைக்குக்கும் Sound track செட் பண்ணுவதற்க்குள் திண்டாடிவிட்டார். அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு இடையே தனியாக மாட்டிக்கொண்ட கடுப்பு வேறு அவருக்கு.

சற்றே ஆயாசமாக அமர்திருந்த பார்வையாளர்களை (நிகழ்ச்சி இரவு 12 மணியையும் தாண்டி நடைபெற்றது) நிமிர்ந்து அமர செய்தது ட்ரம்ஸ் கலைஞரின் ஸோலோ பர்‌ஃபார்மன்ஸ். கடுப்பில் இருந்த Sound engineer கூட தனது கடுப்பை தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு ரசித்தார்.

"ஒன்னாம் படியெடுத்து" என்று ஆரம்பித்து விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பாடலை மாலதி பாடினார். தாளக்கட்டிற்க்கு ஏற்ப சொல் பிறழாமல் இசை குழுவினற்கு ஈடு கொடுத்து அருமையாக பாடினார். பாடல் ஆசிரியரை பற்றி சொல்லும்போது விஜயலக்ஷ்மி நரசிம்மன் என்று அறிவித்தார் B.H.அப்துல் ஹமீது(யானைக்கும் அடி சறுக்கும்?).

பாடகர் கிருஷிடம் சங்கீதா பற்றிய விசாரிப்புகளே அதிகமாக இருந்தது. என் பங்கிற்கு நானும் விசாரித்தேன். சங்கீதாவை அழைத்து வரவில்லையா என்று நான் கேட்டதற்கு இல்லை பாஸ் என்றார். ஒருவேளை வீட்டுல விசேசமா இருக்குமோ? சென்னை வாழ் பதிவர்கள் விசாரித்து சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பாடலுக்கு Y.G.மகேந்திரா தபேலா வாசித்தார்.குறை ஒன்றும் சொல்வதர்க்கு இல்லை.
(இவர் தபேலா வாசித்து பார்த்த முதல் நிகழ்ச்சி விஜய் டீவியில் "வாங்க பேசலாம்". விஜய் டீவியின் நிகழ்ச்சிகளை அட்சரம் பிசகாமல் காப்பி அடிக்கும் சன்,கலைஞர்,ஜெயா டீவியில் "Y.Gயும் தபேலாவும்" என்ற ஒரு புது நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளி வரலாம்)

விகடன் குழுமத்தில் அவ்வப்போது எழுதும் பிரகாஷ் எம் ஸ்வாமி அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

B.H.அப்துல் ஹமீது அவர்களிடம் கேட்க நினைத்து சந்தர்ப்பம் அமையாமல் போன கேள்வி.

"சார், தற்போதைய தமிழ் பாடல்களில் வரும் மேற்கத்திய ஒலிக்கூறுகள் அமையப்பெற்ற பாடல் வரிகளை தங்களுடைய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிக்காக எப்படி ஞாபகம் வைத்துக்கொள்கிறீர்கள்?"

உங்களில் யாருக்காவது அவரை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தால் இந்த கேள்வியை என் சார்பாக கேட்கவும்.

பி.கு : அமெரிக்க வாழ் பதிவர்கள்/ வாசகர்கள் தமிழ்நாடு அறக்கட்டளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்

கலைமாமணி விருது

கலைவாணர் அரங்கில் நடைபெற்ற "கலைமாமணி" விருது வழங்கும் விழாவில் தவில் கலைஞருக்கான விருது பெரும் எனது தந்தையார் தலைச்சங்காடு T.M.ராமநாதன்.

(கலைவாணர் அரங்கம் புணரமைப்பிற்க்காக இடிக்கப்படுவதற்கு முன் நடைபெற்ற கடைசி நிகழ்ச்சி)











Friday, June 4, 2010

முரண்பாடு

“பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். பணிக்கு அனுப்பாதீர்கள்.”

சுவரில் வாசகம் எழுதுபவர்க்கு உதவியாளனாய்

பத்து வயது பாலகன்………………