Tuesday, November 30, 2010

அந்த மூவர்...

"பால் வந்தாலும் வரலன்னாலும் நீ போடுற காப்பி ஒரே மாதிரி தான் இருக்கும்..."
"என்னய்யா சரகம் கிரகம்னுகிட்டு..."
"என்னடா இது......... ரேசன் கடயில சீனிக்கு நிக்கிற மாதிரி நிக்கிறீங்க...."
.
.
.
.
.
.
.

ஏதாவது புரிஞ்சிதா? ......... இல்லியா??? அப்ப நீங்க அதிகமா தமிழ் சினிமா பாக்க மாட்டீங்க போல.....

சரி, இந்த படங்கள பாருங்க.....






.
.
(படங்கள் : கூகிளாண்டவர்)

இப்ப புரிஞ்சுதா.... இவங்க மூணு பேரு பேசிய வசனம்தான் மேல இருக்குறது....

சமகால குணசித்திர நடிகர்களில் எனக்கு பிடித்த மூவர். M.S.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா.

இவங்க மூணு பேரிடம் உள்ள ஒற்றுமை.

* கதாபாத்திரத்திற்க்கேற்ற இயல்பான நடிப்பு
* வசன உச்சரிப்பில் தேவையான ஏற்ற-இறக்கம்.
* திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமை
(கொஞ்ச நாளா தம்பி ராமையா நெலம கொஞ்சம் பரவாயில்ல)
* நடிப்பு தவிர சினிமாவின் மற்ற பகுதிகளில் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.
இளவரசு : ஒளிப்பதிவாளர்,
பாஸ்கர் : பின்னணிக்குரல் கொடுப்பவர்,
தம்பி ராமையா: இயக்குநர்.
(இதயும் தாண்டி இவங்கள பத்தி நிறய விசயம் இருக்கு.
இப்பதிக்கி இது மட்டும்.)

அடடா........ பதிவ ஆரம்பிச்சாச்சி, இப்ப முடிக்கணுமே என்ன பண்ணுறது..... சரி finishing touch (???) குடுத்துறவேண்டியதுதான்.

சு . பதிவர் : "என்னப்பா எல்லாரும் ரேசன் கடயில சீனிக்கு நிக்கிற மாதிரி நிக்கிறீங்க...."
அ . பதிவர் : "அதுவா,லிவிங் டுகெதர் பத்தி தொடர் பதிவு எழுதப்போறோம். அதா எல்லாரும் தொடர்ச்சியா நிக்கிறோம்"
சு . பதிவர்: "அட என்னப்பா, நம்மள மாதிரி தனி பதிவா போட்டமா, கமெண்ட்ட பாத்தமான்னு இல்லாம தொடர் பதிவு தொடாத பதிவுன்ணுகிட்டு"
அ . பதிவர் : (மனசுக்குள்) " க்க்கும்.....கமெண்ட் போட்டாலும் போடாட்டாலும் நீ போடுற பதிவு ஒரே (???) மாதிரித்தான் இருக்கும்..."

பினா குனா : சு.பதிவர் =சுமார் பதிவர்/அ.பதிவர்= அப்பிராணி பதிவர். இதுல வேற எந்த உள்/வெளி/பக்கவாட்டு குத்தும் இல்லீங்கோவ்வ்வ்வ்வ்.............