Thursday, July 29, 2010

ஓ-ஞாநி:பத்திரிக்கை சுதந்திரம்-பறிக்கப்படும் தந்திரம்

"உருப்படியா எழுத விடாம உருளைகிழங்கை பத்தி எழுத வக்கிராங்க..." , ஜுலை 6ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு அமெரிக்காவின் - அட்லாண்டிக் எக்ஸ்பிரஸ்வேயில் காரில் சென்று கொண்டு இருக்கயில் ஞாநி சொன்ன வார்த்தை......


அன்றிரவு கார் பயணத்தில் குமுதம்- ஓ பக்கங்கள் சம்பந்தமான பேச்சே அதிகம் பயணித்தது. வார்த்தை முடிவுகள் கடிதமாய் மாறியுள்ளது இப்போது......


சமீப காலமாய் ஞாநியின் கட்டுரைகளின் சில சாராம்சங்கள் குறிப்பாக அரசுக்கு, ஆளும் கட்சிக்கு எதிரான விசயங்கள் குமுதம் நிர்வாகத்தால் நீக்கப்பட்டோ அல்லது திருத்தப்பட்டோ வெளிவந்தன. மேல்மட்ட நிர்வாகத்தில் வந்துள்ள பிரிவினை இதற்கான அடித்தளம் என்று தெரிகிறது...


"எழுத்தில் சமரசம் என்பது எனக்கு ஒத்துவராத விசயம், இந்தியா திரும்பியவுடன் என்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்பதே அவருடைய இறுதி முடிவாய் இருந்தது. அந்த முடிவு மின்னஞ்சல் வாயிலாக குமுதத்தை சென்றடைந்திருக்கிறது.


குமுதம் வார இதழில் தன்னால் ஓ பக்கங்கள் கட்டுரையை தொடர்ந்து எழுத முடியாததற்கான காரணங்களை தெரியப்படுத்தி அதனை தனது வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.



ஞாநி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதங்கள்












எனக்கு ஒரே ஒரு சந்தேகம் : பத்திரிக்கை (சு)தந்திரம், அச்சு ஊடக (அ)சாத்தியம், ஊடக தார்(மீகம்) அப்படீனெல்லாம் பேசுறாங்களே... அப்படின்னா என்னங்க???


(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )


11 comments:

எல் கே said...

avanga enna eluthinaalum yaarum kekkak koodathu

ராம்ஜி_யாஹூ said...

பணத்திற்காக எழுத்து சுதந்திரத்தை சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஞானி பாராட்டப் பட வேண்டியவர்.
கவ அலைகள் இல்லா/ குறைந்த மனிதராக ஞானி இருக்க வாழ்த்துக்கள்.
.

a said...

//
LK said...
avanga enna eluthinaalum yaarum kekkak koodathu
//
ஆமாங்க... அவங்க வச்சதுதான் சட்டம்..

ஜோதிஜி said...

ரெண்டு ஓட்டு போடலாங்க. ஏன் இட்லி இல்ல.

உண்மைத்தமிழன் said...

இங்கே பத்திரிகைகளும் தங்களது சுய லாபத்துக்காக அரசியல்வியாதிகளிடம் வளைந்து கொடுக்க ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டன..!

Karthick Chidambaram said...

Nannum ithaya en pathivil eluthi ullen.

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_30.html

a said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இங்கே பத்திரிகைகளும் தங்களது சுய லாபத்துக்காக அரசியல்வியாதிகளிடம் வளைந்து கொடுக்க
//
அண்ணே: சரியா சொல்லி இருக்கீங்க..

a said...

//
Karthick Chidambaram said...
Nannum ithaya en pathivil eluthi ullen.
//
கார்த்தி : உங்கள் பதிவு பார்த்தேன்,,,, தெளிவான பதிவு....

Chitra said...

நான் குமுதம் தொடர்ந்து படித்ததில்லை..... அவர் கட்டுரை உட்பட. அதனால், கருத்து சொல்லும் அளவுக்கு ஞானம் இல்லை. உங்கள், பதிவில் இருந்து விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

a said...

சித்ரா : வருகைக்கு நன்றி....

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment