Sunday, February 15, 2015

தண்ணீர்.


”அசோகமித்திரனின் கதைகளில் யாரும் சண்டையிடுவதோ, உரக்க விவாதம் செய்துகொள்வதோ இல்லை. மத்தியதர மனிதர்கள் தங்கள் நெருக்கடிக்குள் உழன்றபடியே மீட்சிக்காக காத்திருக்கிறார்கள்,”.

”100 சிறந்த சிறுகதைகள்” தொகுப்பில் அசோகமித்திரனின் சிறுகதைகள் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை.

“தண்ணீர்” நாவல் எஸ்.ராவின் முன்னுரையை வழிமொழிகிறது. மத்தியதர சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரை மையமாக வைத்து நடைபெறும் சம்பவங்கள், அதிகார தோரணைகள், அத்துமீறல்கள் என அன்றாடங்களை அழகாக எழுத்தில் காட்சிபடுத்தியிக்கிறார்.

1971ல் எழுதப்பட்டிருந்தாலும் 2015லும் நம்மால் கதையின் சூழ்நிலைகளுக்குள் பொருத்திக்கொள்ள முடிகிறது.

தண்ணிலாரியின் ஹாரன் சத்தம் கடவுளின் அசரீரியாய் கேக்கும் பரபரப்புகள் நிறைந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் வாழும் ஜமுனா அவரது தங்கை சாயா. இவர்களிருவருக்கிடையில் நடக்கும் சம்பாஷணைகள்,வருத்தங்கள், சந்தோஷங்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழவிரும்பும் ஜமுனா. தன்போக்கிற்க்கு இழுத்துபிடிக்கும் சாயா.

முடிவற்று முடியும் நாவல்....

(சில வாரங்களுக்கு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் தண்ணீர் நாவலைத்தழுவி திரைப்படம் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது)


தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
ரூ.115.

0 comments:

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment