Saturday, September 4, 2010

நீச்சல்குளமும் ரெட்டைவால் குருவியும்.


இந்த வாரம் லாங்க் வீக்எண்ட் (Sep 6th Labor day) என்பதால் எங்கு செல்லலாம் என கடந்த மூணு வாரமாக திட்டம் போட்டு ஏற்கனவே போய் வந்த இடம், போகாத இடம், மீண்டும் போகத்தோன்றும் இடம், விமானத்தில் போக வேண்டிய இடம், காரில் போக வேண்டிய இடம் என்று அலசி ஆராய்ந்து கடைசியில் இந்த தடவை எங்கேயும் போகாமல் வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று முடிவு பண்ணியாச்சி...

வெள்ளி இரவு நடுநிசி கடந்தும் தூங்காமல் பொட்டித்தட்டிக்கொண்டுருந்துவிட்டு அப்புறம் SAW படத்தின்
PART-V ம் PART-VI ம் பார்த்து முடித்து தூங்க செல்கயில் மணி காலை 5.30.

மதியம் 3 மணி சுமாருக்கு துகிலெழுந்து, மோட்டு வலையை பார்த்துக்கொண்டு படுத்திருக்கயில், குளத்துப்பக்கம் போலாமே என்ற யோசனை வர, சரி போயி ரொம்ப நாளாச்சேன்னு அபார்ட்மெண்ட்டின் தரைதளத்தில் இருக்கும் குளத்துக்கு கிளம்பினேன்.

எங்க அபார்ட்மெண்ட் குளத்துல குளிக்கறத்துக்கு கொஞ்சம் கெடுபிடி இருக்கும். அங்க உள்ள போர்டுல எழுதிபோட்டுருக்குற வரைமுறை படித்தான் நடந்துக்கணும்... சாரி.... குளிக்கணும்.

குளத்துல இறங்குறத்துக்கு முன்னாடி life guard ஒருத்தர் நம்மகிட்ட "நீச்சல் தெரியுமா?", "இதுக்கு முன்னாடி குளிச்சிருக்கியா"(பாத்ரூமுல இல்ல குளத்துல...)? அப்படீன்னு குறுக்கு விசாரணையெல்லாம் பண்ணிட்டு "OK, you can get into the pool now" அப்படீன்னு சொல்லிட்டு கைல ஒரு பட்டய கட்டிவிடுவார்.

நான் போனப்ப எப்போதும் இருக்குற life guard இல்ல, அவருக்கு பதிலா புதுசா ஒரு பொண்ணு ஒக்காந்துருந்துச்சி... என்ன பாத்து என்ன நினச்சிதுன்னு தெரியல, எதுவும் கேக்காமலே "Sir, you can get in" அப்படீன்னு சொல்லிட்டு கைல இருந்த ஐபோன நோண்ட ஆரம்பிச்சிடுச்சி...

எங்க வீட்டு குளத்துல( அட நாம இருக்குற வீட்ட நம்ம வீடுன்னு சொல்லுறது இல்லியா? அப்ப நம்ம வீட்டுல இருக்குற குளத்தை நம்ம வீட்டு குளம்னு சொல்லலாம்ல...) குளிக்க வந்தவங்க உடனே குளத்துல எறங்க மாட்டாங்க.... குளக்கரை ஓரமா மெதுவா ரெண்டு மூணு ரவுண்டு சுத்தி வருவாங்க. அப்புறமா குளத்த சுத்தி போட்டுருக்குற கட்டில்ல குப்புற பத்து நிமிசம், மல்லாக்க பத்து நிமிசம் படுத்திருப்பாங்க.... அப்புறம் கொண்டு வந்திருக்கிற புத்தகத்த பத்து நிமிசம் படிப்பாங்க.... அப்புறம் i-pod ல பத்து நிமிசம் பாட்டு கேப்பாங்க.... அப்புறம் கூட வந்திருக்குற பாப்பா வாயில தேனு இருக்கானு வாயால ஆராய்ச்சி பண்ணுவாங்க..... அப்புறமா தண்ணியில குதிப்பாங்க..... இப்படியெல்லாம்
பண்ணினாதான் பிரபல பதிவராம்... அய்யோ. மறுபடியும் சாரி.... பிரபல நீச்சல்காரராம்.....


குளிக்க(?) சென்றபோது எடுத்த போட்டோ.

ம்ம்ம்... நமக்கு தேனு எடுக்கறத்துக்கு எல்லாம் ஏது கொடுப்பினை.... அப்புறம் நாம இருக்குற கலருக்கு சூரியன பாத்து மல்லாக்க படுத்தா என்ன ஆவறது.... அதனால ஒரு ஓரமா நிழல்ல கிடந்த கட்டில்ல போயி படுத்துக்கிட்டு கைல எடுத்துட்டு போயிருந்த நம்ம பழமைப்பேசி அண்ணனோட ஊர்பழமை புத்தகத்த எடுத்து ஏற்கனவே படிச்சி விட்ட இடத்துலெருந்து படிக்க ஆரம்பிச்சேன்.....

பத்து நிமிசம் கழிச்சி புத்தகத்த நெஞ்சில் மல்லாத்தி விட்டு i-pod ட எடுத்தேன்... ஓவ்வொரு பாட்டா scroll பண்ணும்போது கண்ணில் பட்டது அந்த பாட்டு. பாட்டை select செய்வதற்க்குள் மனசு குளத்த தாண்டி, வீட்டை தாண்டி, ஏர்போர்ட் போயி, பிளைட் புடுச்சி கண்டம் விட்டு கண்டம் தாண்டி மெட்ராஸ்ல எறங்கி பஸ் புடிச்சி எங்க ஊரு குளக்கரைக்கு சென்றுவிட்டது.....

சின்ன வயசுல ஒருநாள் ஊரு குளத்துல குதியாளம் போட்டுக்கொண்டுருக்கயில் காற்றுவாக்கில் காதருகில் வந்த பாட்டு. அப்போது இன்னார் இசையில் வந்த பாட்டுன்னோ, இன்னார் பாடிய பாட்டுன்னோ, இந்த படத்தில் வந்த பாட்டுன்னோ தெரியாது. மொத தடவயா கேக்கும்போது என்னையுமறியாமல் உடம்பில் ஒரு சிலிர்ப்பு தெரிஞ்சிது....

இன்னக்கி கேக்கும்போதும் என்னால் அந்த சிலிர்ப்பை உணரமுடிந்தது....

அமெரிக்க நீச்சல்குளத்தில் இருந்து எங்கள் ஊர் தாமரைகுளத்திற்க்கு சடுதியில் என்னை அழைச்சிட்டு போன இந்த பாட்டை நீங்களும் கேட்டுபாருங்களேன் (ஏற்கனவே கேட்டுருந்தாலும்.)




டிஸ்கி : கண்ணை மூடி இந்த பாட்டயே திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருந்ததுனால நேரம் போனதே தெரியல.... படுத்திருந்த கட்டில் திடீர்ன்ணு ஆட, கண்ண தொறந்து பாத்தா life guard பெண், "Sorry Sir, the pool time is closed, you gotta leave the pool in five minutes.. " ன்னு சொல்லிட்டு போச்சு.

ம்ம்ம்... குளிக்க வந்ததுக்கு இதவாச்சும் செஞ்சிட்டு போவோம்னுட்டு ரெண்டு காலையும் தண்ணியில நனைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்....



25 comments:

சுந்தரா said...

உங்க வீட்டுக்குளத்திலிருந்து, உங்க ஊர்க்குளத்துக்குக் கூட்டிப்போன பாடல் உண்மையிலேயே நல்லபாடல்தான்.

பகிர்வுக்கு நன்றி யோகேஷ்!

a said...

வருகைக்கு நன்றி சுந்தரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்ல பாட்டு.... பகிர்வுக்கு நன்றி...

a said...

@@வெறும்பய : நன்றி

பழமைபேசி said...

நீச்சல் குளத்துல நீந்தினீங்களா, கனவுலகத்துல நீந்தினீங்களா??

அந்த பாட்டு, நல்ல பாட்டுத்தேன்....

a said...

//
பழமைபேசி said...
நீச்சல் குளத்துல நீந்தினீங்களா, கனவுலகத்துல நீந்தினீங்களா??
//
பழமை அண்ணே : நீச்சல் குளத்துல நீந்த போன என்னை கனவுலகத்துல நீந்தவசிடுச்சி இந்த பாட்டு...

RAMYA said...

பகிர்வு நல்லா இருந்திச்சு, அப்புறம் அந்த அபார்ட்மென்ட் போட்டோ செம!

a said...

//
RAMYA said...
பகிர்வு நல்லா இருந்திச்சு, அப்புறம் அந்த அபார்ட்மென்ட் போட்டோ செம!
//
நன்றி ரம்யா...

அன்பரசன் said...

அப்புறம் குளிச்சீங்களா இல்லியா?

எம்.எம்.அப்துல்லா said...

அடப்பாவி!இன்னும் முழுகாம இருக்கியா??

:)

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பாடல்....பதிவு அருமை வாழ்த்துகள்

a said...

//
அன்பரசன் said...
அப்புறம் குளிச்சீங்களா இல்லியா?
//
ம்.. (வீட்டு பாத்ரூமில்...)

a said...

//
எம்.எம்.அப்துல்லா said...
அடப்பாவி!இன்னும் முழுகாம இருக்கியா??
:)
//
ஏன்னே...... நல்லாத்தான போயிக்கிட்டு இதுக்கு .............

dondu(#11168674346665545885) said...

சித்தப்பு இண்டெர்நேஷனல் உபயத்தில் இதே பாட்டின் ரீமிக்ஸ் சூர்யாவின் படத்துக்கு:

http://www.youtube.com/watch?v=lNhw18Fb5jg

அன்புடன்,
டோண்டு ராகவன்

a said...

நன்றி RK GURU...

a said...

//
dondu(#11168674346665545885) said...
சித்தப்பு இண்டெர்நேஷனல் உபயத்தில் இதே பாட்டின் ரீமிக்ஸ் சூர்யாவின் படத்துக்கு:
//
சார்.. ரீமிக்ஸ் வீடியோ பார்த்தேன்........... அருமை...

http://rkguru.blogspot.com/ said...
This comment has been removed by the author.
a said...

RK GURU : Coming Soon...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதிகிரீர்கள் வாழ்த்துக்கள்...

அதை இந்தியன் "அது" என்று கூப்பிடலாமே?

ப்டியுங்கள்

http://tamilkadu.blogspot.com

Chitra said...

So, you are in Pennsylvania? Cool!

Enjoy!

a said...

@@நன்றி சித்ரா. ஆமாங்க, PENNSYLVANIA லதான் இருக்கேன்.

@@நன்றி அஹமது இர்ஷாத்.

சி.பி.செந்தில்குமார் said...

aahaa,oru forienkarar sikkittaaruyyaa,kummi adicchuduvom,mudhal kummi,

yokesh,sms that figure cell number to me

a said...

@@நன்றி செந்தில்குமார்....
அடுத்த தடவ பாக்குறப்போ நம்பர் கேட்டு வாங்கி அனுப்புறேன்............

ஜோதிஜி said...

அடப்பாவி!இன்னும் முழுகாம இருக்கியா??
இதைப்படித்தவுடன் லேசாக சிரித்தேன். ஆனால்

ஏன்னே...... நல்லாத்தான போயிக்கிட்டு இதுக்கு .............

அறை அதிரும்படி சிரித்துவிட்டேன்.

இந்த பாட்டு ரொம்பவே பிடிக்கும். ம்ம்ம் ராஜவாழ்க்கை தான்.

தமிழ் செல்வன் இரா said...

இதுவும் கேளுங்கள் யோகேஷ்
http://www.youtube.com/watch?v=8yfCalkUll4&feature=related

how do you feel..?

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment