"வேதாசலம், ஒவ்வொரு கூட்டத்துலயும் ஒன்னோட பேச்சுக்கு அப்ளாஸ் அள்ளுதுய்யா. சாதிய எதுர்ப்பு பத்தி நீ பேசுறத மணிக்கணக்கா கேட்டுக்கிட்டே இருக்கலாம். சும்மாவா, உனக்கு கச்சியிலயும் ஆட்சியிலும் முக்கிய பதவி கொடுத்து என் கூடவே வச்சிருக்கேன்.சரிய்யா, நா கிளம்புறேன், நாளக்கி பொதுகுழுக்கு சீக்கிரம் வந்து சேரு.........." கிளம்பிய கட்சி தலைவருக்கு கையசைத்த வேதாசலம் தனது ரெட்ட நாடி சரீரத்தை திணித்துக்கொள்ள, சைரன் அலறலுடன் புறநகர் பங்களா நோக்கி சீறியது வேதாசலத்தின் கார்.
"சொல்லு குமரா, ஏதோ பேசணும்ன்னு சொன்னியே", கண்ணாடியை பனியனின் உள்பக்கத்தில் துடைத்தவாரே மகனை ஏறிட்டவரின் எதிரில் வந்தமர்ந்தான் குமரன்.
"அப்பா, நா ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்..... " பேசிக்கொண்டு இருந்த குமரனை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார் வேதாசலம்.
படபடவென சொல்லி முடித்து, வேதாசலத்தின் முகபாவத்தை படிக்க முயற்சி செய்துகொண்டிருந்த குமரனுக்கு அப்பாவின் அந்த கேள்வி சற்றே சந்தோசத்தை கொடுத்தது. இதழோரம் வரவைத்துக்கொண்ட புன்னகையிணூடே "நீங்க, கண்டிப்பா கேப்பீங்கன்ணு தெரியும்பா, அவளும் நம்ம ஜாதிதான்............".
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஹலோ, எங்க கிளம்பிட்டீங்க, கத இன்னும் முடியல...... கொஞ்சம் கீழே படிங்க....
"குமரா, இந்த கல்யாணம் நடந்தா என்னோட அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாயிடும். அவளை மறக்குற வழிய பாரு........... " முடிவாய் சொல்லிவிட்டு தன்னறைக்கு செல்லும் வேதாசலத்தை பார்வையால் வெறித்துக்கொண்டிருந்தான் குமரன்.
Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts
Monday, August 23, 2010
Subscribe to:
Posts (Atom)